Connect with us

உலகம்

டென்மார்க்கில் துப்பாக்கிச்சூடு

Published

on

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

வணிக வளாகத்திற்கு வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு திடீரென தாக்குதல் நடத்தினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறியடித்து வெளியே ஓடினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த பலர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை மீட்டு பொலிஸார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார்அதிரடியாக கைது செய்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *