Connect with us

Sports

சுரங்க லக்மால் விமான நிலையத்தில் எதிர்நோக்கிய சம்பவம்

Published

on

இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை அணி இன்று (17) காலை நாட்டை வந்தடைந்தது.

இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்திருந்தது.

இதன்போது விமான நிலைய பிரவேச முனையத்திற்கு வந்த ஒருவர் இலங்கை அணியின் தோல்வி குறித்து விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருந்து தெரிவித்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால்,

“தோல்வியடையும் போது ஒரு விதத்திலும், வெற்றிப் பெறும் போது ஒரு விதத்திலும் பேசுவார்கள். வீரர்கள் என்ற வகையில் நாங்கள் அதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அனைவரும் போட்டியில் வெற்றிப்பெறவே எதிர்ப்பார்கிறோம். வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

இதன் பின்னர் நாட்டுக்காக விளையாடப் போவதில்லை. சிறந்த ரசிகர்கள் எமக்கு உள்ளனர். அவர்கள் வீரர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *