Connect with us

உலகம்

பாடகி லதா மங்கேஸ்கரின் இறுதி கிரிகைகள் தொடர்பான அறிவிப்பு

Published

on

இந்தியா முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மறைந்த பாடகி லதா மங்கேஸ்கரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் மீதான இறுதி கிரிகைகள் மாலை 6.30 க்கு மும்பை, சிவாஜி பூங்காவில் மராட்டிய மாநில அரசின் மரியாதையோடு நடத்தப்படவுள்ளது.

இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் காலை காலமானார்.

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

காலமான போது அவருக்கு வயது 92 ஆகும்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.