இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) உத்தேசித்துள்ளதாக அதன் பேச்சாளர் Gerry Rice தெரிவித்துள்ளார்.
பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாகவும், அதற்கிணங்க நிபுணத்துவ குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகளை காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதி வரை கையிருப்பு அந்த அளவில் இருக்கும் என...
‘டொலர் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது”என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF)...