நாவல கொஸ்வத்தை பகுதியில் 19 சீன பிரஜைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையவழி பண மோசடி குற்றச்சாட்டில் குறித்த சீன பிரஜைகள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள், அம்பாந்தோட்டை...
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக உதவிகளைப் பெற்றுக் கொள்கின்ற ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இலங்கை அரசுக்கும் ரஷ்யா அரசுக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைத்...
புறக்கோட்டை மலிபன் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 03வது மாடியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள்...
முட்டை விலை அதிகரிப்பிற்கு இடைத்தரகர்களே காரணம் என்றும் அரசாங்கம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால், 30 ரூபாவுக்கு மீண்டும் முட்டையை விற்பனை செய்ய முடியும் எனவும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் . உற்பத்தியாளர்களிடமிருந்து முட்டையை கொள்வனவு...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள...
சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பரவிவரும் போலிச்...
தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.
அரசியல்வாதிகள், இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் என 7 பேருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இதனால், இந்த 7 நபர்களும் தமது சொத்துகள், வங்கி கணக்குகள் மற்றும்...