Connect with us

வானிலை

இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கும் !  

Published

on

 

நாட்டின் சில இடங்களில் இன்று மனித உடலினால் உணரக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்த நிலையில், பதிவாகும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் கடும் வெப்பம் நிலவும் நேரத்தில், அதிகளவான நீராகாரங்களைப் பருகுமாறு கோரப்பட்டுள்ளனர்.

அத்துடன், வீட்டில் இருக்கும் நாட்பட்ட நோயாளர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *