Connect with us

உலகம்

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் !

Published

on

 நேபாளத்தில் அடுத்தடுத்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவை டெல்லியிலும் உணரப்பட்டுள்ளன.நேபாளத்தில் 25 நிமிடங்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.அவை பிற்பகல் 2.25 மணிக்கும் 2.51 மணிக்கும் ஏற்பட்டுள்ளதுடன், 4.6 மற்றும் 6.2 ரிக்டர் அளவில் 5 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகின.இதனையடுத்து, 15 நிமிடங்கள் கழித்து 3.1 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கமும் 13 நிமிடங்கள் கழித்து 3.1 மெக்னிட்யூட் ரிக்டர் அளவில் நான்காவது நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் (National Centre for Seismology,) கூற்றுப்படி, அருணாச்சல பிரதேசத்தில் மாலை 3.27 மணிக்கு 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் உத்தரகாண்டில் சில நிமிடங்களுக்குப் பிறகு 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கங்கள் டெல்லியிலும் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டுள்ளன. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *