Connect with us

உலகம்

இந்தியாவின் மூத்த ரோ அதிகாரியை அதிரடியாக வெளியேற்றிய கனடா

Published

on

இந்தியாவின் மூத்த ரோ அதிகாரி  ஒருவர் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் கனடாவிற்கு பொறுப்பாக இருந்த அதிகாரி  என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருக்கும் தூதரகத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரியாகவும் இவர் பார்க்கப்படுகின்றார். அதற்குப் பதிலாக இந்தியாவும் ஓரிரு கனேடிய அதிகாரிகளை வெளியேற்றியிருக்கின்றது. ஆனால் அவ்வாறு வெளியேற்றப்பட்ட அதிகாரிகள் யார் என்பதை இந்தியா அறிவிக்கவில்லை என குறிப்பிட்டார். 

இதேவேளை,  இந்த செயற்பாடுகள் முதற்கட்டமாக இருந்தாலும் இதனைக் கடந்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை இருக்கவே செய்கிறது எனவும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் சுட்டிக்காட்டினார். 

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இராஜதந்திர முறுகல் நிலை என்பது உச்சக்கட்டத்தை அடைந்து வரும் நிலையில், அதன் விளைவுகள், அடுத்தக்கட்ட நகர்வுகள் என்பன குறித்து அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *