Connect with us

Uncategorized

“MV Eurosun” கப்பலின் தற்போதைய நிலை

Published

on

திருகோணமலையில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் பாறை ஒன்றில் மோதி நிலத்தில் தரை தட்டியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் கடற்படையின் சுழியோடிகள் இன்று கடலுக்குள் சென்று பார்வையிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

MV Eurosun கப்பலை கண்காணிக்க கடற்படையினருடன் விமானப்படையினரும் இணைந்துள்ளதாக கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

கப்பல் விபத்துக்குள்ள போது 33,000 க்கும் அதிகமான மெற்றிக்தொன் அளவான பொருட்களும், 720 மெற்றிக்தொன் எரிப்பொருளும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது, கப்பலில் 18 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *