Connect with us

உலகம்

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் உயிரிழப்பு

Published

on

ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 23.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு தேசிய நிலநடுக்க நெட்வொர்க் தளத்தில் இதன் அளவு 5.9 ரிக்டர் அளவாக பதிவானது.இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 400-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரானிய செய்தி நிறுவனமான IRNA தகவல்படி இந்த நடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது மற்றும் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது ஈரானின். அண்டை நாடான கிழக்கு அஜர்பைஜானின் மாகாண தலைநகரான தப்ரிஸ் உட்பட பல நகரங்களிலும் இது உணரப்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *