Connect with us

வானிலை

இன்றும் மழை பெய்யும் சாத்தியம் !

Published

on

   வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு நிலவுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் ஆகிய மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *