Connect with us

உள்நாட்டு செய்தி

“அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் இ.தொ.கா நிச்சயம் பங்கேற்கும்”

Published

on

அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில்,  தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் இ.தொ.கா நிச்சயம் பங்கேற்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ” தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.