Connect with us

Sports

பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் T20 தொடர்: பாகிஸ்தான் வசம்

Published

on

பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்றிரவு நடந்தது.

இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாபர் அசாம் 7 ரன்னில் ரன்-அவுட் ஆனார்.

கடைசி கட்டத்தில் ஷதப் கான் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 28 ரன்கள் விளாசி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்.

அடுத்து களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இதனால் பாகிஸ்தான் 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரான்டன் கிங் அரைசதம் அடித்தும் (67 ரன், 43 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) பலன் இல்லை.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.