Connect with us

Sports

இங்கிலாந்தை துவம்சம் செய்து 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

Published

on

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இதற்கமைய 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னளிலைப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (16) லோட்சில் முடிவுக்குவந்த இரண்டாவது டெஸ்டில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு கேட்டுக்கொண்டது.

அதற்கமைய இந்திய அணி முதல் இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து இங்கிலாந்து முதல் இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 391 ஓட்டங்களைப் பெற்றது.

அதனையடுத்து இந்திய இரண்டாவது இனிங்சுக்காக 298 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 272 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்த இங்கிலாந்து நேற்றைய 5 ஆம் நாளில் 120 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக கே.எல்.ராகுல் தெரவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.

இது லோட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெற்றுள்ள மூன்றாவது வெற்றி ஆகும்.