Connect with us

Politics

பேச்சை விட செயலுக்கே முன்னுரிமை – ஜனாதிபதி

Published

on

தற்போது சர்வதேச நாடுகளின் கௌரத்தையும் நன்மதிப்பையும் பெற்று இலங்கை முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றும்’ விசேட உரையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

“வெளிநாடுகளுக்கு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்யும் நிலை மாற்றியுள்ளது. நீதிமன்றம் மற்றும் பொலிஸ் சேவையில் இது வரை அரசாங்கம் தலையீடு செய்ததில்லை. இனிமேலும் பொலிஸ் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு அழுத்தங்களை கொடுக்க போவதில்லை. பெருந்தோட்ட பகுதிகளில் 4000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திறமைக்கே முதலிடம். முதலீட்க்கே முதலிடம். பேச்சை விட செயலுக்கே முன்னுரிமை” என்றார்.