உள்நாட்டு செய்தி
இன்று முதல் விசேட போக்குவரத்து..!

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தொடருந்து திணைக்களம் இன்று முதல் விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதன்படி கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான தொடருந்து சேவைகளை முன்னெடுக்கத் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இன்று முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள தொடருந்து சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.