Connect with us

உள்நாட்டு செய்தி

போதைப்பொருட்களுடன் யாத்திரை மேற்கொண்ட 592 பேர் கைது

Published

on

சிவனொளிபாத மலைக்கான யாத்திரையில் போதைப்பொருட்களுடன் யாத்திரை மேற்கொண்ட 592 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஹட்டன் வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் அவர்களிடமிருந்து 60 இலட்சத்து 29 ஆயிரத்து 324 ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதானவர்கள் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என ஹட்டன் வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடையும் வரை இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *