உள்நாட்டு செய்தி
மீண்டும் தலைத்தூக்கும் சிக்கன்குனியா!

நாட்டில் சிக்கன்குனியா நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிக்கன்குனியா வைரஸ் பாதிக்கப்பட்ட நுளம்பு கடிப்பதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது, மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பயணிகளிடமிருந்து பாதிக்கப்படாத பகுதிகளுக்கு பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.
நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே சிக்குன்குன்யா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.