உள்நாட்டு செய்தி
பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விடுத்துள்ள அறிவிப்பு…!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இன்று (21) இரவு 20:40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த UL 503 (கொழும்பு முதல் லண்டன்) மற்றும் UL 504 (லண்டன் முதல் கொழும்பு) ஆகிய விமானங்கள் இயக்கப்படாது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மின்சாரத் தடை மற்றும் தீ விபத்து காரணமாக முழு நாளும் மூடப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.