Connect with us

உள்நாட்டு செய்தி

மீண்டும் விளக்கமறியலில் தேசபந்து தென்னகோன்.!

Published

on

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிகம – பெலேன பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.