உள்நாட்டு செய்தி
போலி புதையல் நாணயங்களை விற்பனை செய்த இருவர் கைது..!

புதையல் தங்க நாணயங்கள் என கூறி தங்க மூலாம் பூசப்பட்ட போலியான நாணயங்களை விற்பனை செய்வதற்கு முயன்ற நபர்கள் இருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில்
குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் நுவரவெவ பகுதியில் சனிக்கிழமை (08) நடத்திய சுற்றிவளைப்பின் போது,
சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் போலியான தங்கமூலாம் பூசப்பட்ட நாணயங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 37,42 வயதுடைய அநுராதபுரம் கல்கடவள பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.