Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலை மாணவி கர்ப்பம் 16 வயது இளைஞன் கைது..!

Published

on

சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான 16 வயது மாணவன், 14 வயது சிறுமியை காதல் உறவு கொள்ளச் செய்து, பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஆவார்.கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி ரிக்ரொக் சமூக ஊடகம் மூலம் சிறுமி மாணவனை அடையாளம் கண்டு, அவருடன் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியைப் பார்க்க சிறுமியின் வீட்டிற்கு அந்த மாணவர் இரவு நேரத்தில் வந்துள்ளார்.அந்த நேரத்தில்தான் அசம்பாவிதம்நடந்ததாக சிறுமியின் வாக்குமூலங்கள் கூறுகின்றன.அன்று இரவு, சந்தேகத்திற்குரிய மாணவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமியின் வாக்குமூலங்களில், அவர் வீட்டில் தனியாக இருந்தபோது மாணவன் பலமுறை அவரிடம் வந்ததாகவும், இதைப் பற்றி சிறுமி யாரிடமும் சொல்லவில்லை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.திடீரென ஏற்பட்ட ‘மயக்கம்’ காரணமாக, சிறுமியின் தாயார் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்ற பிறகு, சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனை பொலிசார் மூலம் பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, விசாரணை நடத்தப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *