உள்நாட்டு செய்தி
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி.!!

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று ( 21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து, கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபரின் பெயர் சசிகுமார் வயது 37 என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ள நிலையில் அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.