உள்நாட்டு செய்தி
இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள அறிக்கை. .!

பருவ சீட்டை வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்களை இலங்கைப் போக்குவரத்து சபை பஸ்களில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பருவ சீட்டை வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது இலங்கைப் போக்குவரத்து சபை கொள்கையின்படி கடுமையான குற்றமாகும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ஏற்றிச் செல்ல மறுத்தால், 1958 என்ற எண்ணை அழைத்து SLTB தகவல் மையத்திற்கு தெரிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.