Connect with us

உள்நாட்டு செய்தி

36 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது..!

Published

on

கனடாவைச் சேர்ந்த 36 வயதான வெளிநாட்டு பெண் ஒருவர், சுமார் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட விதம் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த சர்வதேச புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி வழியாக இலங்கைக்கு வந்துள்ளார். அவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட 36.5 கிலோ ஹஷிஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர் பற்றிய தகவல் கைது செய்யப்பட்டவர் 36 வயதான கனேடியப் பெண் அவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருள் வேறு நாடுகளுக்கு மறுவிற்பனை செய்ய இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பாக கனேடிய பெண் மற்றும் போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *