உள்நாட்டு செய்தி
காதலி மறுத்ததால் விபரீத முடிவெடுத்த காதலன்..!

காதலர் தினத்தன்று யாழ்ப்பாணம் வருவதற்கான தனது விருப்பத்தை தனது காதலி மறுத்ததாகக் கூறப்பட்டதால், 29 வயது நபர் ஒருவர், தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்கணையில் பதிவாகியுள்ளது.
வீட்டில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த இவர் , இன்று (14) தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.
நிராகரிப்பால் ஏற்பட்ட மன உளைச்சலால் அந்த இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தங்கள் மகன் ஒரு உறவில் இருந்ததாகவும், காதலர் தினத் திட்டங்களை காதலி மறுத்தது மட்டுமல்லாமல், அவரைத் திட்டியதால் மனம் உடைந்ததாகவும் பெற்றோர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர் .
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.