Connect with us

உள்நாட்டு செய்தி

வரி குறித்து விசேட அறிவிப்பு 

Published

on

இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியம் இல்லை என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1% வரிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர், “குறிப்பாக, மறைமுக வரிகளைக் குறைப்பது காலப்போக்கில் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இந்த வருடத்திற்குள் வரி குறைப்பை எதிர்பார்க்க முடியாது.சர்வதேச நாணய நிதியத்தின்படி,15.1 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு வரியை நாம் வசூலிக்க வேண்டும். ஆனால் இந்த செயல்முறையிலிருந்து நாம் மீண்டு, வருவாய் வசூலின் செயல்திறன் அதிகரிக்கும் போது, ​​அந்த மானியங்களை அந்தத் தொழில்களின் தயாரிப்புகளுக்குத் திருப்பித் தரும் சாத்தியம் உள்ளது.அதற்கு அப்பால் சென்றால், விசேடமாக வங்கித் துறை மற்றும் தொழில்களின் தொழிநுட்ப முதலீடுகளுக்கு வரிச் சலுகைகளை வழங்க புதிய அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.எனவே 17 ஆம் திகதி பட்ஜெட்டில் இதையெல்லாம் நாம் காணலாம். பட்ஜெட் ஊடாக, குறிப்பாக தொழில்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் ஆதரவை வழங்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.அடுத்த சில ஆண்டுகளில் தொழில்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.கைத்தொழில்களுக்கான பொருட்களை இறக்குமதி செய்யும் போது புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *