முக்கிய செய்தி
மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு..!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/05/powercut.jpg)
வெள்ளிக்கிழமை (14) நரோச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க இலங்கை மின்சார சபை எதிர்பார்ப்பதாக அதன் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.அதுவரை, தற்போதைய (ஒன்றரை மணி நேர) மின்வெட்டு அட்டவணை தொடரும். இருப்பினும், விடுமுறை மற்றும் குறைந்த மின்தேவை காரணமாக புதன்கிழமை அன்று மின்வெட்டு இருக்காது.வியாழன் மற்றும் வெள்ளிக்கான மின்வெட்டு குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.