Connect with us

உள்நாட்டு செய்தி

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது..!

Published

on

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது.

விவசாயிகளிடமிருந்து நாளை முதல் அமுலாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக உலர் நெல் கொள்வனவு செய்யப்படும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.அதற்கமைய, நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோவொன்று 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *