உள்நாட்டு செய்தி
புதிய பேருந்துகள் இறக்குமதி…!

பயணிகள் போக்குவரத்திற்கு பாதுகாப்பான மற்றும் உயர்தர பஸ்களை பயன்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
அதன்படி, நாட்டில் பயணிகள் போக்குவரத்திற்காக புதிய பஸ்களை பெறுவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சகம் பல நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள சட்டவிரோத உபகரணங்களை அகற்றும் திட்டம் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அதோடு வாகன இறக்குமதி குறித்தும் அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.