Connect with us

உள்நாட்டு செய்தி

வாகன இறக்குமதி குறித்து,மத்திய வங்கி ஆளுநரின் பரிந்துரை…!

Published

on

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது கருத்தை விளக்கினார்.

மே 2024 முதல் நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். அந்த நேரத்தில் தேவை இருந்தது.

5 ஆண்டுகளாக புதிய வாகனங்களை நாங்கள் கொண்டு வர அனுமதிக்கவில்லை.

பொருளாதாரத்தின் செயல்திறன் மேம்படும் போது, நாட்டுக்கு புதிய வாகனங்கள் தேவை.

தற்போதுள்ள வாகன சந்தையின் மதிப்பை அந்த அளவில் வைத்துக்கொண்டு வாகனத்தை புதுப்பிக்க விரும்பினால், புதுப்பிக்கும் நபர் மேலதிக பணம் செலுத்தி, வாகனத்தைப் புதுப்பிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது எனது பரிந்துரை.

முந்தைய மாற்று விகிதத்தையும் தற்போதைய மாற்று விகிதத்தையும் எடுத்துக் கொண்டால், மாற்று விகிதங்கள் நிறைய மாறிவிட்டன.

கூடுதலாக, 18% VAT புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

பின்னர் இரண்டும் இணைந்தால் ஐந்து வருட பழமையான வாகனம் சந்தையில் 05 மில்லியன் மதிப்புடையதாக இருந்தால்,

புதிய வாகனம் கொண்டுவர அனுமதித்தால், பழைய வாகனங்கள் அனைத்தும் மதிப்பை இழந்து இறுதியாக, அதிக எண்ணிக்கையிலான புதிய தேவையற்ற வகையில் வாகனங்கள் நாட்டிற்குள் நுழைய ஆரம்பிக்கும்.

இல்லையெனில், இது சமநிலையில் செய்யப்பட வேண்டும்.

அவசியமானால் மட்டுமே அதிகப் பணம் செலுத்தி வாகனத்தைப் புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட வேண்டும் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *