Connect with us

முக்கிய செய்தி

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள காலக்கெடு…!

Published

on

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளது.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 82(ஏ) பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்ததை தொடர்ந்து 3 மாத காலத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருடாந்தம் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை 2025.02.15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.