Connect with us

election 2024

மாகண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு

Published

on

  அடுத்த வருடத்திற்குள் மாகாணாசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் ஜனாதிபதி அனுரகுமார இதனை தெரிவித்துள்ளார் அதேசமயபம் உள்ளுராட்சி சபை தேர்தல்களையும் அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வலுவான அமைச்சரவை நாடாளுமன்றம், மாகாணசபைகள் உள்ளுராட்சி சபைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வலுவான அரசியல் பொறிமுறை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார்.