Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கு வரவுள்ள தேர்தல் கண்காணிப்பு குழு!

Published

on

பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு இன்று (25) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

குறித்த அமைப்பைச் சேர்ந்த 30 கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணிகளுக்காக நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தொடர்ந்தும் நாட்டிலேயே தங்கியுள்ளன.

பொதுத்தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அவர்களுடன் மேலதிக குழுவொன்றும் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *