Connect with us

உள்நாட்டு செய்தி

16 தமிழக மீனவர்கள் கைது..!

Published

on

 இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பினுள் புதன்கிழமை (23) இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்துள்ள கடற்படையினர் விசாரணைகளுக்கு பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் வி.பி.சேசுராஜா மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய மீன்வளத் துறையிடம் அனுமதி டோக்கன்களைப் பெற்று, இரண்டு இயந்திரப் படகுகள் மூலம் ராமேஸ்வரம் கடலுக்கு புதன்கிழமை சென்றனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது.

மீனவர்களை இலங்கையில் இருந்து விடுவிக்க மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *