Connect with us

முக்கிய செய்தி

பொதுத்தேர்தலின் பின்பும் ஹரிணியே பிரதமர்!

Published

on

பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசில் பிரதமர் பதவியில் மாற்றம் வராது எனவும் அதிலும் கலாநிதி ஹரிணி அமரசூரியவே பிரதமராக இருப்பார் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன் 25 பேரடங்கிய புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கே வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குச் சட்டரீதியாக கிடைக்க வேண்டிய விடயங்கள் வழங்கப்படும் என்றும், அதற்கு மேலதிகமாக எதுவும் வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.