Connect with us

முக்கிய செய்தி

கம்பஹா மாவட்டத்தில் நீர் வெட்டு..!

Published

on

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்
நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வத்தளை, மாபொல, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவை நகரசபை பகுதிகள், வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவாங்கொட பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.