Connect with us

முக்கிய செய்தி

கொழும்பில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு!

Published

on

ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 1,874 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 41,285 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,549 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே ஆகும்.

மேலும், வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,832 நோயாளர்களும் மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4,288 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,177 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *