Connect with us

உள்நாட்டு செய்தி

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published

on

இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40, 958 ஆக உயர்ந்துள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதன்படி அந்த மாகாணத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 17, 383 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 10, 284 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *