Connect with us

உள்நாட்டு செய்தி

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

Published

on

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது இன்று (18) சடுதியாக அதிகரித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 213,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 196,250 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாருடங்களில் நாட்டில் தங்கத்தின் விலையானது உச்சம் தொட்டது இதுவே முதன் முறையாகும். எதிர்காலத்தில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று முன்தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 210,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 194,400 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,710.73 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *