Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பு கிராண்ட்பாஸ் துப்பாகிச்சூடு!

Published

on

கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நேற்று (16) மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கார் ஒன்று கண்டுபிடிக்கபப்ட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த கார் ஹங்வெல்ல அம்புல்கம பிரதேசத்தில் வைத்து இன்று (17) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்திற்கு நேற்று மாலை நான்கு மணியளவில் காரில் சென்ற இனங்காணப்படாத நபர்கள் சிலர் முச்சக்கரவண்டியில் இருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த துபாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *