Connect with us

முக்கிய செய்தி

நாளையதினம் பாடசாலைகளுக்கு விடுமுறை…!

Published

on

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளையதினம் (14-10-2024) சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், கம்பஹா மாவட்டத்தின் வத்தளை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.