Connect with us

உள்நாட்டு செய்தி

கொலையில் முடிந்த மாமனார் மருமகன் சண்டை!

Published

on

  பலாங்கொடை – தஹமன பிரதேசத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மருமகன் உயிரிழந்துள்ளதாக, பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், பலாங்கொட – தம்மானையை சேர்ந்த 44 வயதுடைய மிகஹவெல லெக்மிலகே விஜேகுமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் வீட்டுக்கு அவரது மனைவியின் தாயும் தந்தையும் வந்திருந்த நிலையில் மனைவிக்கும், குறித்த நபருக்கம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டின் வரவேற்பறையில் வைத்து மனைவியின் தந்தை மருமகனை தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில் சந்தேக நபரான பெண்ணின் தந்தையை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *