Connect with us

உள்நாட்டு செய்தி

பலத்த மழை,கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு!

Published

on

  நாட்டில் பெய்துவரும் பலத்த மழையினால் தெற்கு அதிவேக வீதியில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வெலிப்பன்ன இடமாறும் பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எனவே தெற்கு அதிவேக வீதியில் பயணிப்போர் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவிசாவளை புவக்பிட்டிய தும்மோதர, மிரிஸ்வத்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவிசாவளை – கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு எற்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *