Connect with us

உள்நாட்டு செய்தி

வடக்கு ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Published

on

வடக்கு ரயில் மார்க்கத்திற்கான போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ சந்தியிலிருந்து அநுராதபுரம் வரையிலான தொடருந்து பாதையில் சமிக்ஞைகளை சரிவர பொருத்தாத காரணத்தினால் ரயில்வே சேவைகள் தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் நேரத்தை குறைக்கும் வகையில் வடக்கு ரயில் பாதையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த திருத்தப்பணி நிறைவடைந்தால் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் 5.5 மணித்தியாலங்களுக்குள் மக்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியும்.

இதற்காக, வடக்கு ரயில் பாதையை நிறுத்தி கடந்த ஜனவரி மாதம் முதல் 10 மாதங்களாக திருத்த வேலைகள் இடம்பெற்று வந்தன.

இருப்பினும், தற்போது ரயில் பாதையின் திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் கூட ரயில் சேவைக்குத் தேவையான சமிக்ஞைகளை பொருத்தாத காரணத்தினால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *