Connect with us

உள்நாட்டு செய்தி

வெளிநாட்டு யுவதி பாலியல் துஷ்பிரயோகம்

Published

on

பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கண்டி, குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

30 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்த நிலையில், கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் ஹோட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்து வெளிநாட்டு யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *