Connect with us

உள்நாட்டு செய்தி

சட்டவிரோத வாகனங்களை கைப்பற்ற தீர்மானம்..!

Published

on

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவுக்கு மேல் வரி செலுத்தாமல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை,

உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மாத்திரம் நிற்காமல், சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறும்,

கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களில் 20 வாகனங்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை ஆராய்ந்த நீதிபதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

60 மில்லியன் ரூபா பெறுமதியான மிட்சுபிஷி ஜீப் ஒன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது.

வாகனத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி வாகனத்தின் உரிமையாளருக்கு நீதித்துறை அறிவுறுத்தியிருந்த போதிலும் அவர் வாகனத்தை மறைத்து வைத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாகனத்தை கைப்பற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னரே வாகனத்தை கைப்பற்ற முடிந்தது.

உண்மைகளை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான், அரசாங்கத்திற்கு வேண்டுமென்றே நஷ்டத்தை ஏற்படுத்துபவர்களை கைது செய்வது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியதோடு, அவ்வாறான நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்தார்.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சாதாரண வாகனங்களாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு பொய்யான தரவுகளை வழங்கி பதிவு செய்திருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *