Connect with us

Election 2023

​ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது….!

Published

on

​ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார். வாக்களிப்பு நடவடிக்கை நேற்றைய தினம் காலை 7மணி முதல் மாலை 4மணி வரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் பிற்பகல் 5 மணியாகும் போது வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியிருந்தன. 

இவ்வாறான சூழலில் நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணியில் இருந்து இன்று காலை 6 மணிவரை ​ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. 

அதேநேரம் இன்று காலை ஊரடங்கு உத்தரவானது இன்று மதியம் 12 மணி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *