Connect with us

Election 2023

வாக்களிப்பு எண்ணும் பணிகள் ஆரம்பம்

Published

on

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர் பட்டியலின்படி ஒரு கோடியே எழுபத்தி ஒரு இலட்சத்து 40,354 பேர் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.ஒட்டுமொத்த வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.அதேநேரம் மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.