Connect with us

உள்நாட்டு செய்தி

பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை…!

Published

on

தற்போதைய நிகழ்வுகளாக கடந்த கால சம்பவங்களை தவறாக சித்தரிக்கும் பழைய காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் இலாபத்திற்காக தவறாக வழிநடத்தும் வன்முறைச் சம்பவங்களை தூண்டக்கூடிய குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் தனிநபர்களால் வாகனங்களை சோதனை செய்வது மற்றும் ஊரடங்கு உத்தரவு காலத்தில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் போன்ற சில வீடியோக்கள் மீண்டும் பகிரப்பட்டு சமூக தளங்களில் பரவுகின்றன.

இந்த வீடியோக்கள் காலாவதியானதாக இருந்தாலும், பொதுமக்களை தவறாக வழிநடத்தி அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

இதுபோன்ற தவறான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்வதுடன் இது குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.

அவ்வாறான காணொளிகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *